
தோல்வியின் வெற்றி !!!
ஒவ்வொரு அசைவையும்
ஒவ்வொரு கவிதையாய்
காகித வீதியில்கடை விறிக்க
கை எடுக்கும் போதெல்லாம்
வார்த்தைகள்
வழுக்கி வாய்க்குள்ளேயே
விழுந்து விடுகிறது
உன் வில்லிடை அசைவில் !
என் மௌனத்தின்
மர்மம் கேட்கும்
உன்னிடம்
நான் பேச
எத்தனிக்கும் போதெல்லாம்
இமைகளோ கூந்தலோ
இடறி விழ வைத்து
என் மொழியை ஊனமாக்கி
என்னை மௌனமாக்கி
மர்மம் நீடிக்க செய்கிறது
இப்போதெல்லாம்
என் மொழி ஊனமாகவோ
நான் ஊமையாகவோ
உன்னை பற்றிய கவிதைகள்
கால்கள் உடைந்தோ
இருப்பதில்லை
காரணம்
இருவர் கண்ணிலும்
இருந்த காதலுக்கு
இப்போது
பார்வை இல்லை !!!
இன்ப வலி
இன்ப வலியை
கண்ணீராகவோ
கவிதையாகவோ
வெளியேற்ற
விரும்பாமல்
வீழ்ந்து கிடந்தேன்
படுக்கையில் ....
என்னையறியாமல்
என் கண்களில்
நீர்...
விசாரித்ததில்
சிறகுகளை
உடைத்து விட்டதற்காக
என் கனவு அழுகிறதாம் !!!