Friday, April 8, 2011

கடமை !!!


ஓர் உருவம் நீர் போலவே 
ஓடி கொண்டிருக்கிறது 
நிறமற்ற அந்த உருவம் 
நிற்காமல் எங்கோ 
ஓடி கொண்டிருக்கிறது 

நீர் போலவே 
அதற்கும் உருவமில்லை...
முதல் வாக்கியம் பிழையே !
பிழையை பற்றியெல்லாம் 
அது கவலைப்படுவதில்லை 
ஓடிக்கொண்டே இருக்கிறது !

நீர் போலவே 
இதற்கும் தமிழ் 
பெயர் கொடுத்து 
உயிர் கொடுத்தாலும் 
எல்லா மொழிகளின் 
உயிரோசை இதுவே !
இதை பற்றியெல்லாம் 
அது வாதம் செய்வதில்லை 
ஓடிக்கொண்டே இருக்கிறது !

மேகமாய் மாறி 
மழையாய் பொழிந்து
மீண்டும் நீராய் 
ஆவது போல் ...

உயிர் இனங்களின் 
உயிராய் மாறி 
மீண்டும் அதன் 
நிலைக்கே திரும்பும் 
இந்த உயிருக்கு 
காற்று என்று பெயர் !

மரங்கள் காற்றை அசைக்கிறதா 
காற்று மரங்களை அசைக்கிறதா 
இரண்டுமே சண்டையிட்டு 
இவ்வுலகை காக்கிறதா ?!
இதை பற்றியெல்லாம் 
அது விளக்கம் கொடுப்பதில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறது !

அவ்வப்போது நின்றாலும் 
மீண்டும் ஓடுகிறது 
உயிர்களுக்கு உயிர் கொடுக்க 
காலத்திற்கு கால் கொடுக்க
ஓடி கொண்டிருக்க வேண்டும் 
என்றெல்லாம் நொடிப்பொழுதும் 
இது நினைப்பதில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறது !
தன் கடமையை தானே 
செய்து கொண்டே இருக்கிறது !!!


காற்று
தன் கடமையைத் தானே 
செய்து கொண்டே இருக்கிறது !!!