Wednesday, July 1, 2009

இரங்கல் கவிதை !!!

இனப்படுகொலை கண்டு


இறப்பதே மேல் என்று


இறைவனை வேண்டினேன்


இறந்துவிட்டான் நண்பன் என்று செய்தி !



உண்மையில் ஒருகணம் இறந்து


உயிர்தெழுந்தேன் !!!


கல்லூரியின்


முதல் நண்பனே !


முதலாவதாய் முந்தி கொண்டாயே


மரண போட்டியில் !!!



உன் கண்ணாடி


என் கண் முன்னே நிலாடுகிறதே


உன் சிரிப்பு சத்தம்


என் சிந்தையில் இன்னும் கேட்கிறதே !



உன் திறமை ஊரறியும் !


உலகறியும் ஒரு நாள்


எதிர்பார்த்து காத்து இருந்தேன் !


புதிராய் ஆகிவிட்டாயே !


கல்லூரி வாழ்க்கையில்


கிண்டலும் கேலியும்


விதிக்கபடா விதி !


விதியால் மதியிழந்து பலர்


மனதை புண்படுத்தி இருக்கிறேன்!


மணவறை வந்து


மன்னிப்பு கேட்கலாம் என்றிருந்தேன்


மரண கவிதை வரைய வைத்து விட்டாயே !

குழந்தையாய் பிறந்து


குழந்தையாய் வளர்ந்து


குழந்தையாய் இறந்து விட்டாயே!


என் குழந்தை நண்பா!

எட்டு வருட நினைவுகளே


எனக்கு கவிதை எழுதியும்


கரையவில்லை !


உன் பெற்றோருக்கு ..........


உன் பெற்றோரின் ஓலம்


கடவுளுக்கு கேட்காது


காரணம் இங்கே


கடவுளின் காதுகளில்


துளைகள் இருப்பதில்லை !


அங்கே


கடவுளை கண்டால்


அடுத்த ஜென்மத்தில்


அதே பெற்றோருக்கு


அணையா ஜோதியாய்


அமைய வேண்டி கேள் !


அடுத்த ஜென்மத்திலாவது


அவர்கள் கனவு மெய்படட்டும்


அவர்கள் ஜோதியை


அகிலம் அறியட்டும் !


ஜோதியின் உயிர் நின்றிருக்கலாம்


ஜோதியின் உடல் அழிந்திருக்கலாம்


ஜோதியின் நினைவுகள் அழிவதில்லை


உண்மையில்


என் ஜோதி அணையும் வரை !!!


----- கண்ணீருடன் நண்பன் !!!