என்னோடு பிறந்தவன்
என்னோடு இருப்பவன்
சிலநேரங்களில் விலகுவான்
மீண்டும் சேர்வான்
நான் சிரிக்கும்பொழுது
அவன் சிரித்ததில்லை
நான் அழும்பொழுது
அவன் அழுததில்லை
வேறுபாடு இருப்பினும்
என்னைவிட்டு விலகியதில்லை
அதற்காகவே அவனை
நான் நேசிக்கிறேன்
அவனும் என்னை
உயிராகவே பாவிக்கிறான்
என்னுடன் அந்த நண்பனையும்
கொல்ல போகும்
என் இறப்பை
நினைக்கையில் எனக்கு
எரிச்சலே மிச்சம் !
என்னுடன் என் நிழலையும்
கொல்லும் அளவிற்கு
இறப்பின் கோரம்
இருக்க காரணம்
நான் என் நண்பனாம்
என் நிழலை
நேசித்த அளவு
என் இறப்பை
நேசிக்கவில்லை என்பதே !!!