மாலைப் பொழுதில்
மழையும் மரங்களும்
மழலையாய் உரையாடுவதில்
மனது லயித்து
மரம் கொத்துவதை
மறந்து கேட்கிறது
மரங்கொத்திக் குருவி !
கண்ணில் பசியோடு
காட்டுக்குள் வரும்
காளையர் இருவர்
மரங்களின் உடலை
வெட்ட ஆரம்பிக்க...
மரத்தை மீண்டும்
கொத்த ஆரம்பிக்கிறது
குருவி !
தங்கள் உரையாடலை
நிறுத்தி விடுகிறது
மழையும் மரங்களும்... !!!
வலி
வேலை தேடி
விரக்தியின் விளிம்பில்
வெயிலின் அனலில்
வியர்வையில் நடக்கையில்
பசுமையான உடலால்
வெயில் தாங்கி
நிழல் தரும் மரம்
உணர்த்துகிறது
குடும்ப பாரம்
தாங்கும்
தந்தையின் வலியை !!!