Monday, May 16, 2011

மரங்களும் மழையும் !!!


மனிதர்கள் அற்ற 
மாலைப் பொழுதில் 
மழையும் மரங்களும்
மழலையாய் உரையாடுவதில் 
மனது லயித்து 
மரம் கொத்துவதை 
மறந்து கேட்கிறது 
மரங்கொத்திக் குருவி !

கண்ணில் பசியோடு 
காட்டுக்குள் வரும் 
காளையர் இருவர் 
மரங்களின் உடலை 
வெட்ட ஆரம்பிக்க...
மரத்தை மீண்டும்
கொத்த ஆரம்பிக்கிறது
குருவி !
தங்கள் உரையாடலை 
நிறுத்தி  விடுகிறது 
மழையும் மரங்களும்... !!!


வலி

வேலை தேடி
விரக்தியின் விளிம்பில்
வெயிலின் அனலில் 
வியர்வையில்  நடக்கையில் 
பசுமையான உடலால் 
வெயில் தாங்கி
நிழல் தரும்  மரம் 
உணர்த்துகிறது 
குடும்ப பாரம் 
தாங்கும் 
தந்தையின் வலியை !!!