Friday, October 29, 2010

நிறக்குருடு !!!





ழைத்துளியை  இடுப்பில் தாங்கி 
முத்த மழையில் நனைவதை 
நான் நெருங்கி பார்க்கையில் 
வெட்கத்தில் பச்சையாய் சிரிக்கிறது 
பசும் புல் !

அதன் பசுமை நிறத்தில் நான் 
என்னை தொலைத்து நிற்கையில் 
எல்லாம் ஒளிக்கதிரின் விளையாட்டு 
என காதில் சொல்கிறது 
அறிவு !

தன் மனதின் நிறத்தை 
தன் இரு கைகள் விரித்து 
நம் கண்முன் காண்பிக்கிறாள் 
பூமித்தாய் என்கிறது 
மனம் !

இரவுப்பொழுதில் கருகி 
போய் விடுமோ அவள்மனம் 
நமட்டு சிரிப்புடன் 
நக்கலாய் கேட்கிறது 
அறிவு !

உறங்கும்பொழுது உடைகளாய்
உடுத்தி இருக்கும் கூந்தலின் 
நிறம் என்று கோபமாய் கூறுகிறது 
மனம் !

இம்சை தாங்காமல் 
இமைகளை மூடினேன் 
ஒரே நிசப்தம் 
பசும்புல் சொன்னது 
உங்கள் பார்வை  பிடித்திருப்பதாய் !

பார்வைதான் காரணம் என்று 
பாடுபொருளே சொல்ல 
மனது மௌனமானது !
அறிவு ஆறுதலாய் 
அதன் கையை பற்றியது !

இரண்டும் சேர்ந்து 
நிறங்களை புறக்கணித்தன ...
இமையை திறந்தேன் 
எதிரே புல் 
கருப்பு வெள்ளையாய் !

மருத்துவர் மனைவியிடம் 
சொல்கிறார்
எனக்கு நிறக்குருடு என்று !!!