Wednesday, October 13, 2010

பெண்ணாதிக்கம்

பள்ளி வாழ்க்கை

படித்தே தீர்ந்தது

கல்லூரி வாழ்க்கை

கனவுகளால் முடிந்தது



விளையாட்டாய் வேலைதேட

புறப்பட்டேன்

கஷ்ட்டப்பட்டு தேடியும்

கிடைக்கவில்லை



வாழ்க்கையை ஆரம்பிக்க

முயற்சிக்கையில்

காதல் ஆரம்பித்தது

முயற்சியே இல்லாமல்



வாழ்க்கையின் வெற்றிடத்தை

அவளே நிரப்பினால்

அனைத்து செலவையும்

அவளே பார்த்துகொண்டாள்



குடுத்த தொல்லையில்

தூக்கி கொடுத்தார்

ஒரு வேலையை

கடவுள்



காலம் கடந்தது

காதலை மூன்று முடிச்சால்

கல்யாணமாய்

முடித்து வைத்தேன்



காதல் மனதிலேறி

காமம் கண்களிலேறி

கர்ப்பம் வயிறேரி

குழந்தையாய் வெளியேறினான்

என் மகன் !



"மகனை மட்டும் பார்

வேலைக்கு நான் மட்டும்
போகிறேன்" என்றேன்

ஆணாதிக்கம் என்கிறாள்

என்ன செய்வது ?



"ஆணாதிக்கம்" என்ற

வார்த்தையை வைத்து

பெண்ணாதிக்கம் செய்வதை

மனைவியாய் இருப்பதால்

இவள் மனம் உணரவில்லை

காதலியாய் இருந்தால்

உணர்ந்திருப்பாளோ ?!