Friday, December 31, 2010

புதிய நாட்கள் 2011 !!!


வ்வொரு வருடமும்
ஓடிகொண்டே இறந்து போகும்
உங்களை
அடுத்த வருடமும்
அப்படியே செய்வீர்களென்று
அறிவியல் அறிவு சொன்னாலும்
ஆரவாரத்தோடு வரவேற்கும்
எங்களை
மகிழ்ச்சிப்படுத்த
ஒரு மணித்துளி 
அதிகமாய் வாழ்ந்து 
ஆயுளை நீட்டித்து 
போக  வேண்டாம் 
வாழும் கணங்களில் 
வருகின்ற ஆண்டிலுள்ள 
இரண்டு ஒன்றைப்போல் 
இரண்டு கைகளையும் 
உயர்த்தி மகிழும் 
வியர்வை தாரும் 
என் 
விருப்பத்திற்குரிய நாட்களே !!!




Thursday, December 23, 2010

காதல் களவியல் !!!



காதல் களவியல்

பருவப் பெண்களை
எதேச்சையாய் பார்க்கையில்
காமமும் வெப்பமும்
கலந்து விளையாட
கண்களும் இமைகளும்
இணைந்து விடைதேட
பகலிலேயே நினைவுகளால்
முடித்து விடும்
களவியல் விளையாட்டுகள்

உன் கண்கள்
பார்த்து பேசுகையில்
காற்றில் நழுவும்
தாவணி கண்டு
என் கண்கள்
உன்னைவிட்டு
எங்கேயோ பார்ப்பதன்
உளவியல் அர்த்தம்
என் காதலில்
காமத்தை மீறிய
தாய்மையும் இருப்பதே !!!

உன்னைத் தேடி 

நீ சிரிக்கையில்
என் சிரிப்பை நிறுத்தி
உன் சிரிப்பின் அழகை
சிந்தாமல் ரசிக்கையில்...
என்னை பார்க்காமல்
இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
என்னும் உன் கேள்விக்கு
யோசிக்காமலேயே
சொல்கிறேன்
பார்வை இருந்தும்
குருடனாய்
வாழ்ந்திருப்பேன் என்று !

Monday, December 20, 2010

விண்மீன் !!!

விண்மீன் 

விண்மீன்களாய் 
உன் கண்கள் என்க
கோபமான விண்மீன்கள் 
இரவோடு இரவாக 
எங்கோ மறைந்து விட 
இமைக்காமல் தேடியும் 
எங்கும் காணவில்லை 
என் முன்னாள் காதலியாம் 
முழுகாத விண்மீன்களை
இருண்ட தேசத்தில் 
இழவோடு அமர்ந்திருக்க 
எதிரே வரும் உன்னிடம்
விண்மீன்களாய் 
உன் கண்கள் !

மக்களாட்சி 

அறிவாய் பேசுகிறாய் 
அரசியல்வாதி 
ஆகிவிடு என்றார்கள்
அனைத்தையும் இழந்து 
அரசியல்வாதி ஆனேன் 
அழகாய் புளுகுகிறாய் 
என்கிறார்கள்


Friday, December 10, 2010

காயும் பழமும் !!!

 
காடு வயல் வரப்பு விட்டு
கல்விக்கூடம் தேடி
விபரமறியா ஞானிகளோடு
வியர்வையாய் சேர்ந்துபோனேன்...

என் வணக்கத்துக்கும்
மரியாதை தந்தார்கள்
ஆசிரியரும் தேசியக்கொடியும் !

சாதியையும் தெரியாது
சகதியையும் தெரியாது
சர்வமும் தெரியும்
மனிதர்களாய் மட்டும் !

மேடு பள்ளம் இல்லா
மென்மையான தோழிகள்
கன்னத்தில் முத்தம் தந்தாலும்
காதல்  இல்லா நட்பு !

அழகான ஆசிரியை 
மலைகளின் வடிவமாய்
மேடுகள் இருந்தாலும்
முகம் மட்டுமே
நிலவாய் அழகு !

அடித்து புரண்டு 
அழுது கண்ணீர் விடுவோம்
அடுத்த கணமே
காயும் பழமும்
இரட்டை விரல்களால்
ஒற்றை நட்பாகும் !

அத்தனை இருந்தும்
ஆசைப்பட்டோம்
அப்பாபோல் வளர !!!

அப்பாவாக ஆனாலும்
ஆசைபடுறோம்
அதே குழந்தையாய்
மீண்டும் மலர !!!

ஆசை நிறைவேறியது
ஆனால் உருவம் மட்டும்
கிழவன் கிழவியாய் !!!



Wednesday, December 1, 2010

காதலின் இசை !!!


இருண்ட பிரதேசத்தில்
இசை வழிகிறது ...
காதால் ஏந்துகிறேன்
காதல் என்கிறது
இசை !

கண்கள் திறந்தால்
காதலி நீ
கதைத்து கொண்டிருக்கிறாய்
தோழியுடன் !

எல்லா மொழி
இசையும் அலையும் காற்றில்
உன் வாய்மொழி
இசைதான் வழிகிறது என் காதில் !

மகிழ்ச்சியாய் பேசிகொண்டே
எதேச்சையாய் திரும்பிய நீ
என்னை பார்த்ததும் 
தொட்டாச்சிணுங்கியாய் 
சட்டென சுருக்கிவிடுகிறாய் 
உன் மகிழ் முகத்தை ...!

உன் தோழி 
என்னை காதலித்தாள்
உன் தோழியாதலால்
நானும் காதலித்தேன் 
அவள் காதலை 
அவள் காதலை மட்டும் ... !

உன்னால் என்னை 
புறக்கணித்தாலும் 
என் காதலை 
புறக்கணிக்க முடியவில்லையே 
அதை போல ...!

கோபமாய் அவ்விடமிட்டு 
தொலை தூரம் சென்று 
திரும்பாமல் திரும்பி 
பார்க்காமல் பார்க்கிறாய்...
அழாமல் அழுகிறேன் ... !

உன் தோழி 
என்னை பார்க்க 
நான் 
உன்னை பார்க்க 
நீ மட்டும் 
பார்வையை மூடுகிறாய் 
இருள்கிறது என் உலகம்  !

இருண்ட பிரதேசத்தில்
இசையாய் வழிகிறது 
காதல் !!!