கருப்பு இரவுகளில்
வெள்ளை மையினால்
உன் மீது
ஆசையாய் எழுதிய
சில எழுத்துகள்
தானாகவே அழிந்தன ..
சில சிறுகதையாய்
வடிவம் பெற்றன..!
முகத்தில் ஆசையாய்
சிறுநீர் தெளித்த
சிறுகதையும் உண்டு
கழுத்தில் மீசையாய்
மாலை அணிவித்த
சிறுகதையும் உண்டு !
புகழ் புயலாய்
முகத்தில் அடிக்க
ஆனந்த வலியில்நான் அழ
உன் கண்ணிலும் நீர் !
கதையும் கரு
உன்னுடையதே என்று
உன் கண்ணீர் துடைக்க ..
நீ ஆனந்த கண்ணீர் என்க..
இருவரும் முகத்திலும்
மகிழ்ச்சி பொங்க...
நம் அன்பு விளையாட்டை
ஆசையாய் பார்த்து
சிரிக்கிறது சிறுகதை
நம் சிறுகதை !!!