Thursday, April 21, 2011

குழந்தை !!!


கருப்பு இரவுகளில் 
வெள்ளை மையினால் 
உன் மீது 
ஆசையாய் எழுதிய 
சில எழுத்துகள் 
தானாகவே அழிந்தன ..
சில சிறுகதையாய்
வடிவம் பெற்றன..!

முகத்தில் ஆசையாய் 
சிறுநீர் தெளித்த 
சிறுகதையும் உண்டு 
கழுத்தில் மீசையாய்
மாலை அணிவித்த 
சிறுகதையும் உண்டு !

புகழ் புயலாய் 
முகத்தில் அடிக்க 
ஆனந்த வலியில்
நான் அழ 
உன் கண்ணிலும் நீர் !
கதையும் கரு 
உன்னுடையதே என்று 
உன் கண்ணீர் துடைக்க ..
நீ ஆனந்த கண்ணீர் என்க..
இருவரும் முகத்திலும் 
மகிழ்ச்சி பொங்க...
நம் அன்பு
விளையாட்டை 
ஆசையாய் பார்த்து 
சிரிக்கிறது சிறுகதை
நம் சிறுகதை !!!