Tuesday, November 16, 2010

கடற்கரை காதல்



கடல் முகம் 

நாம் 
கடலோரம் காற்றாட 
நடந்து போகையில் 
என் காலை 
பிடித்து  கெஞ்சுகிறது கடல் 
உன் அழகு முகத்தை 
கொஞ்ச வேண்டும் என்று !

நான் எவ்வளவு சொல்லியும் 
இது உனக்கான முகம் என்று 
மறுத்துவிடுகிறாய் நீ !

கடைசியில் காலில் 
ஏதோ கறைபட்டு 
கழுவ செல்கிறாய் ...

உன் காலை 
முத்தமிட்ட மகிழ்ச்சியில் 
ஆனந்தமாய் கூச்சலிட்டு 
குதிக்கிறது கடல்...
அலையாய் !!!

வானமும் கடலும் 

உன் விரலோடு 
என் விரல் சேர்த்து 
வீசி நடக்கையில்...


தன இயலாமையால்
அலை அலையாய் 
அழும் கடலுக்கு 
ஆறுதலாய் அதன் 
தலை தடவும்  வானம் 
காரணம் கேட்ட பின் 
தானும் அழுகிறது 
மழை மழையாய் !!!


இருவரையும் நனைத்து விட்ட 
மழையை சாடுகிறேன் நான்
மழையால் உன் விரல் 
தொட்டபின் அழுகையை 
நிறுத்தி விடுகிறது 
வானம் !
விரக்தியில் வேகமாய் 
அழுகிறது 
கடல் !